தலைப்பு செய்திகள்
அனைத்துச் சேவைகளையும் ஒருங்கிணைக்க வரும் கிராமச் செயலகங்கள்!முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி.

தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் கிராமச் செயலகங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, அதனைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும் இன்று சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.
அதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருக்கு காவல் துறை சார்பாகவும் கிராம சபையின் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றிருந்த பலதரப்பட்ட மக்களிடமும் முதல்வர் உரையாடினார். அரசின் நலத்திட்டங்கள் அவர்களைச் சென்று சேர்ந்திருக்கிறதா, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றனவா, வேறு என்ன குறைகள் உள்ளன என்பதையெல்லாம் மக்களிடம் நேரில் கேட்டறிந்தார்.

