தலைப்பு செய்திகள்
பயிற்சி மையத்தில் ராணுவ வீரர் உயிரிழப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குகுளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன் 19, கடந்த ஓராண்டுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.
பெங்களூரில் பயிற்சி மையத்தில் இருந்துள்ளார்.பின்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் இன்று மாலை 5 மணிக்கு சொந்த ஊரான மேலச்சாக்குளம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. ராணுவத்தில் சேர்ந்து ஒரு வருடம் முடியாத நிலையில் மணிகண்டனின் உயிரிழப்பால் கிராம மக்களை சோகத்தில் மூழ்கினர்.
CATEGORIES Uncategorized