தலைப்பு செய்திகள்
அதிமுக உட்கட்சி தேர்தல்: ஓபிஎஸ், ஈபிஎஸ்சுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரி ராம்குமார் ஆதித்தன் உள்பட இரண்டு பேர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அதிமுக மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த பதவிகள் அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
