BREAKING NEWS

திருக்கோவிலூர் அருகே திருபாலப்பந்தல் கிராமத்தில் இரண்டு வயது ஸ்பீக்கர் பாக்ஸில் வைத்து பீரோவில் அடைக்கப்பட்டு சடலமாக கண்டெடுப்பு.

திருக்கோவிலூர் அருகே திருபாலப்பந்தல் கிராமத்தில் இரண்டு வயது ஸ்பீக்கர் பாக்ஸில் வைத்து பீரோவில் அடைக்கப்பட்டு சடலமாக கண்டெடுப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே திருப்பாலப்பந்தல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குரு இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார், இவரின் இரண்டு வயது குழந்தை திருமூர்த்தி கடந்த ஞாயிறு அன்று மாலை நேரத்தில் காணாமல் போய் உள்ளார்,இதனை அடுத்து திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் குரு புகார் அளித்துள்ளார்,அதன் அடிப்படையில் திருப்பாலப்பந்தல் காவல்துறையினர் இரண்டு வயது குழந்தை திருமூர்த்தி காணவில்லை அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று விளம்பரம் செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் அதே வீட்டில் ஒரு பீரோவில் ஸ்பீக்கர் பெட்டியில் இரண்டு வயது குழந்தை அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதார்கள், இதனை அடுத்து திருப்பாலபந்தல் காவல்துறையிருக்கு தகவல் அளிக்கப்பட்ட அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலாக கண்டெடுக்கப்பட்ட இரண்டு வயது குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், மேலும் முதல் கட்ட விசாரணையில் குருவின் தம்பியான ராஜேஷ் வயது 22 என்கிற இளைஞர் குழந்தையை கொலை செய்து ஸ்பீக்கர் பாக்ஸில் அடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது,மேலும் தலைமறைவாக இருக்கும் ராஜேஷை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்,2 வயது குழந்தை ஸ்பீக்கர் பெட்டியில் அடைக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS