பவானி மைலம்பாடியில் பழுதடைந்து காணப்படும் ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி மைலம்பாடி பஞ்சாயத்து உட்பட்ட இருசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மைலம்பாடி பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி சிவானந்தம் தலைமை வகித்தார். பஞ்சாயத்து செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதில் பவானி கிராம ஊராட்சி ஆணையாளர் மாரியப்பன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் இடையே நிறை குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த கிராம சபை கூட்டத்தில் மயிலம்பாடி பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள ரேஷன் கடை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள காரணத்தால் புதிய ரேஷன் கடை ஒன்று கட்டித்தரப்பட வேண்டும். சிக்கநாயக்கனூர் ஏரி பகுதியில் மீன்கள் வளர கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது அதை தடுக்க வேண்டும்.
நாராயணபுரம் குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பத்தின் பாதையை உயர்த்தி மின்பாதை அமைத்து தர வேண்டும். என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.