BREAKING NEWS

பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பத்தாம் தேதி வேலூர் வரும் பிரதமர் கோட்டை மைதானத்தை ஆய்வு செய்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பத்தாம் தேதி வேலூர் வரும் பிரதமர் கோட்டை மைதானத்தை ஆய்வு செய்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

 

தமிழகத்தில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் வேகம் எடுத்துள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி வரும் பத்தாம் தேதி வேலூரில் நடைபெறும் பாஜக கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார்.

இதற்காக வேலூர் விமான நிலையம் வரும் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக வேலூர் கோட்டை மைதானத்தில் காலை 10:30 மணிக்கு நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி அப்துல்லாபுரத்தில் உள்ள கட்டி முடிக்கப்பட்டு இன்னமும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ள வேலூர் விமான நிலையம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் கோட்டை மைதானம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவை சேர்ந்த போலீசார் துப்பறியும் மோப்பநாய் மூலம் சோதனை மேற்கொண்டனர்.

CATEGORIES
TAGS