BREAKING NEWS

பிரசித்திபெற்ற பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா – ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

பிரசித்திபெற்ற பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா – ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள நவகைலாயத்தில் முதல் கைலாய தலமான பிரசித்திபெற்ற உலகம்மை சமேத பாபநாச நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் சித்திரை திருநாள் மிக விமர்சியாக நடைபெறுகிறது
தொடர்ந்து 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. கொடிமரத்திற்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் மற்றும் தீபாதரணை காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

இதில் அம்பை, விகேபுரம், பாபநாசம், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்…

CATEGORIES
TAGS