BREAKING NEWS

போடிநாயக்கனூர் நகராட்சி பயணியர் தங்கும் விடுதியில் திருட்டு

போடிநாயக்கனூர் நகராட்சி பயணியர் தங்கும் விடுதியில் திருட்டு

 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகரில் உள்ள பயணியர் தங்கும் விடுதியானது சுமார் ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதல்வரால் காணொளி வாயிலாக திறக்கப்பட்ட நிலையில்,

 

 

நேற்று இரவு நகராட்சி பயணியர் தங்கும் விடுதியில் நுழைந்த மர்ம நபர்கள் கதவு ஜன்னல் ஃபேன் லைட் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

 

போடி நகர் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் புகார் அளித்ததன் பெயரில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS