BREAKING NEWS

மயிலாடுதுறை நகரின் ஒரு பகுதியில் மட்டும் பெய்த வினோத மழை

மயிலாடுதுறை நகரின் ஒரு பகுதியில் மட்டும் பெய்த வினோத மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் நனைக்கும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெப்பம் தணிந்துள்ளது.

இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மேகங்கள் சூழ்ந்து சில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை நகரில் காவிரிக்கு வடக்கு புறம் சேந்தங்குடி பகுதியில் மட்டும் சுமார் பத்து நிமிடம் நல்ல மழை பெய்தது இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது. குளிர்ச்சியான சூழல் நிலவியது.

சிறிய நகரமான மயிலாடுதுறையில் ஒரு பகுதியில் மட்டும் பெய்த மழை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS