மாவட்ட செய்திகள்
கொள்ளையடிக்க முயற்சி 5 பேர் அதிரடியாக கைது!

தஞ்சாவூரில் இரிடியம் மோசடி ஆள் சிக்காததால் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் முனீஸ்வரன், மற்றொரு முனீஸ்வரன், தேனி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், சின்னமுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பித்தளைப் பானையில் இரிடியம் இருப்பதாக கூறி மோசடி செய்ய ஐந்து பேரும் திட்டமிட்டு தஞ்சை வந்துள்ளனர் . ரூ.50 லட்சம் மோசடி செய்ய வந்தபோது ஆள் சிக்காத நிலையில் கையில் இருந்த பணமும் செலவாகி உள்ளது . செலவுக்கு பணம் இல்லாததால் கொள்ளையடிக்க திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சாலையில் நின்றபோது ஐந்து பேரும் போலீசிடம் சிக்கினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
