BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தலைச் செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக கவுன்சிலர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

All the doors of the Chennai High Court will be closed today. What is the  reason? |இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும்  மூடப்படும்..காரணம் என்ன ? Tamil Nadu News in Tamil

கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த மார்ச் 4-ம் தேதி நடத்தப்பட்டது. அப்போது ஐந்து அதிமுக கவுன்சிலர்களைத் தவிர மற்றவர்கள், வாக்குச்சீட்டை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக கவுன்சிலர் சுப்புராயலுவிடம் காண்பித்த பின் வாக்குப்பெட்டியில் போட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தேர்தல் ரகசியத்தை மீறிவிட்டதாக கூறி, தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி அதிமுக கவுன்சிலர் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில்,” தேர்தல் முடிந்ததும் 16 கவுன்சிலர்களையும் திமுகவின் சுப்புராயலு, ஊட்டி அழைத்துச் சென்றதாகவும், பதவியேற்க அழைத்து வரப்பட்ட அவர்கள், தலைவர் தேர்தல் வரை பெரம்பலூரில் அவரது கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், தலைவர் தேர்தலின் போது தேர்தல் ரகசியத்தை அம்பலப்படுத்தியதால் தேர்தலை ரத்து செய்யக் கோரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு, ” அரசியல் சட்டப்படி, தேர்தல் நடவடிக்கைகளை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல” எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )