மாவட்ட செய்திகள்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமில்ஊராட்சிமன்றதலைவர்மஞ்சுளாசரவணன் தலைமையில். வட்டார மருத்துவ அலுவலர் அரசு முன்னிலை வகித்தார்.
முகாமில் கொரோனாதடுப்பூசி . பல் மருத்துவம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை. எலும்பு .காது மூக்கு தொண்டை பொதுமருத்துவம். கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் ஈசிஜி ரத்தப்பரிசோதனைகள் மகப்பேறு மருத்துவம். ரத்ததானமுகாம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நந்தகோபால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தரம் வாய்ந்த உணவு மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் குறித்து செயல்விளக்கம் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துக்கூறி னார்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்முகாமில் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் மருத்துவர்கள் கனல்வேந்தன் .திலகர் .வனிதா .சுகாதார ஆய்வாளர் கரிகாலன். சிவலிங்கம்.உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஏராளமானோர் முகாமில் பங்கு பெற்றனர் .
பள்ளி மாணவர்களின் கொரோனா பரவல் குறித்த கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.