மாவட்ட செய்திகள்
பேரணாம்பட்டில் ரம்ஜான் வாழ்த்து போஸ்டரால் பரப்பரப்பு!

பேரணாம்பட்டிghல் 5-வது வார்டு நகரமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் அப்துல் ஹமீது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர் அமீனா சலீம் உதவியுடன், வாழ்த்து போஸ்டர் ஒன்றை அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார். அதில் அப்துல் ஹமீத் தன்னை அடுத்த பேரணாம்பட்டு நகர மன்றத் தலைவர் நான்தான் என்றும், சிங்கத்தின் குகையில் சென்று வேட்டையாடும் சிங்கம் நான்தான் என்று மறைமுகமாக கூறி உள்ளதாகவும், நகரமன்ற உறுப்பினர் அப்துல் ஹமீதின் இந்த செயலை கோமாளித்தனமாக உள்ளதாகவும், பேரணாம்பட்டு பொதுமக்கள் அப்துல் ஹமீதின் செயலை பார்த்து கைக்கொட்டி சிரிப்பதாகவும் பேரணாம்பட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இனிவரும் காலங்களிலாவது அப்துல் ஹமீது இதுபோன்ற பைத்தியகாரத்தனமான செயல்களில் ஈடுபட கூடாது என்பதே பேரணாம்பட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
