BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர் பல்லடம் தாராபுரம் சாலை புத்தரிச்சல் அருகே சரக்கு ஆட்டோ இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

பல்லடம் தாராபுரம் சாலை புத்தரிச்சல் அருகே சரக்கு ஆட்டோ இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது நேருக்கு நேர் மோதி கோர விபத்து!
3 வயது பெண் குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்தில் பலி. உடல்களை கைப்பற்றி காமநாயக்கம்பாளையம் போலீசார் விசாரணை!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலை புத்தரச்சல் அருகே கோவையிலிருந்து மணப்பாறை நோக்கி இரண்டு இருசக்கர வாகனங்களில் குமரேசன் அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் வாகனத்திலும் முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் ஒரு பெண் குழந்தை ஆகியோர் மற்றொரு வாகனத்திலும் சென்றுள்ளனர். இன்று அதிகாலை புத்தரச்சல் பகுதியை கடந்தபோது எதிரே வந்த காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ ஒன்று நேருக்கு நேராக இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் சென்ற ஐந்து பேரும் சரக்கு ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இந்த விபத்து குறித்து அவ்வழியே சென்றவர்கள் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆனந்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குமரேசன்,முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர்.பலியான 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இந்த விபத்துக்கு காரணமான சரக்கு ஆட்டோ ஓட்டுனர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படும் நிலையில் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.பல்லடம் அருகே இன்று அதிகாலை நடந்த இருசக்கர வாகனங்கள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஒரு 3 வயது பெண் குழந்தை உள்பட 4 பேர் பலியான சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )