BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணி குளிக்கும் போது தண்ணீரில் காணாமல் போன 5 பவுன் தங்க நகை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாய் அருவியில் குளித்து மகிழ்ந்து கொண்டிருந்த நிலையில் திருச்சி மணப்பாறை வையம்பட்டி பகுதியை சேர்ந்த மணி த/பெ வீரபத்திரன் என்ற சுற்றுலா பயணியின் 5 பவுன் தங்க நகை தண்ணீரில் தொலைந்துவிட்டது. உடனடியாக வனச்சரகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலறிந்து விரைந்து வந்த வனச்சரகர் டேவிட் ராஜன் அருவியில் தொலைந்து போன தங்க நகையை தேடும் பணியில் ஊழியர்களை ஈடுபடச் செய்தார். அப்போது கண்டுபிடிக்கப்பட்ட 5 பவுன் தங்க நகையை உரிமையாளரிடம் வனச்சரகர் டேவிட்ராஜன் ஒப்படைத்தார். இவரது செயல் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் ,சுற்றுலாப் பயணிகளும் மற்றும் பொதுமக்களும் வனச்சரகர் அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர் .மேலும் தேடுதல் பணியில் ஈடுபட்ட வெங்கடசாமி, இயேசு மணி, ஆறுமுகம், வனக்காவலர் முருகன் மற்றும் வன ஊழியர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )