மாவட்ட செய்திகள்
அந்தியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆணை கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் வயது 43 இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார் இந்நிலையில் இவர் நேற்று இரவு அந்தியூர் அம்மாபேட்டை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆனந்தன் பலத்த காயம் அடைந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் ஆனந்தன் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்குப்பதிவு செய்து ஆனந்தன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
