மாவட்ட செய்திகள்
சுற்றி வளைத்த போலீஸ். பெட்ரோல் குண்டு வீசி தப்பிய கொள்ளை கும்பல்: அதிர்ச்சி பின்னணி:

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே கொள்ளையடிக்க வந்த கும்பலை சுற்றி வளைத்த போலீஸார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு கொள்ளையர்கள் தப்பிய பரபரப்புச் சம்பவம் நடந்திருக்கிறது.
கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று தொடங்கப்பட்டது. சுமார் 2800 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட அந்த எண்ணெய் ஆலை நிர்வாக காரணங்களால் பாதியிலேயே மூடப்பட்டு விட்டது. பரந்து விரிந்த அந்த ஆலையில் இரும்பு உள்ளிட்ட பல தளவாடப் பொருட்கள் இருந்தன. ஆலையில் போதிய காவலாளிகள் இல்லாத நிலையில் ஆலையில் உள்ள பொருட்களை ஒரு சில கும்பல்கள் தொடர்ந்து திருடி வந்தனர்.
இதுகுறித்து ஆலை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த ஆலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதன் விளைவாக ஆலையில் திருட வந்தவர்களின் 70 இருசக்கர வாகனங்கள், 7 மினி லாரிகள் ஆகியவற்றை இதுவரை பறிமுதல் செய்துள்ளனர். அப்படியும் திருடர்களை பிடிக்க முடியவில்லை, திருட்டையும் தடுக்க முடியவில்லை. தொடர்ந்து திருட்டுப்போன வண்ணமே இருந்தது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
