மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை அருகே மரக்கன்று நடுவிழா:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள புது வசந்தம் ஆதரவற்றோர் இல்ல வளாகத்தில் மரக்கன்று நடும் விழா சிலுக்குவார்பட்டி ஆர். சி . பள்ளி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எலிசபெத் ஸ்டெல்லா மேபல் தலைமையில் நடைபெற்றது.

மரக்கன்று விழாவில் மரக்கன்று நடும் மூலம் மக்களுக்கு தேவையான தூய்மையான காற்று மற்றும் பல்வேறு வகையான நற்பயன்கள் இருக்கின்றது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலைய போலீசார் அன்பு, சோழவந்தான் டாஃபே நிறுவன பொறுப்பாளர் மெகா ஃபேயில், புது வசந்தம் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
