மாவட்ட செய்திகள்
பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம்.
பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும். பங்குனி மாதத்தின் முதல் பிரதோஷமான இன்று பெருவுடையாருக்கு ஏற்ற பெரு நந்திக்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால், திரவியப்பொடி, கரும்புச்சாறு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்திக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தஞ்சாவூர்