BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கொலை வழக்கில் தொடர்புடைய 03 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு.

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
சிறுநாயக்கன்பட்டியில் கடந்த 08.02.2022 ம்தேதி ஜான் பீட்டர்(40) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் ஜான்சன்(26) என்பவர் உட்பட 06 நபர்களை அம்பாத்துரை காவல்நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் 06 நபர்களில் சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஸ்டாலின் ஜான்சன்(26), சிஜு(25) மற்றும் ஆரோக்கியதாஸ்(33) ஆகிய மூன்று நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர்
திரு.விசாகன், மூன்று நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

உத்தரவைத் தொடர்ந்து அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் ஸ்டாலின் ஜான்சன், சிஜு, மற்றும் ஆரோக்கியதாஸ் ஆகிய மூன்று நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )