BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அணைக்கட்டு வட்டாட்சியர் ஈடுபட்டு வருகின்றார்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அணைக்கட்டு வட்டாட்சியர் ஈடுபட்டு வருகின்றார்

சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்ட கரும்பு பயிர்கள் அழிக்கப்பட்டு வருகிறது

சுமார் 100க்கும் மேற்பட்ட வருவாய் துறை பணியாளர்கள் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் பயிர்களை அழித்து வருகின்றனர்

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நீர்மம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கடந்த மழைக்காலத்தின் போது தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றது.

அதில் ஒரு பகுதியாக அணைக்கட்டு அடுத்த வெட்டுவானம் பாலற்று பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கரும்பு நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர் இன்று அப்பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் உடன் இணைந்து வருவாய்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.

வெட்டுவானம் பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அணைக்கட்டு வட்டாட்சியர் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர் இதில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு இப்பகுதி விவசாயிகளும் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் அதற்கு நீதிமன்ற உத்தரவை தன்னால் மீறமுடியாது என்று அணைக்கட்டு வட்டாட்சியர் அவர்கள் தெரிவித்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )