மாவட்ட செய்திகள்
திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில் மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் ஆய்வு.

திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா க்கு உட்பட்ட தொட்டியம் காவல் நிலையத்தில் மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காவல் நிலையத்தில் உள்ள சக காவலர்களிடம் வழக்கு தொடர்பான பதிவுகளை கேட்டறிந்ததோடு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் வழக்குக்கு தகுந்த நடவடிக்கை முறையாக எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


அப்போது முசிறி துணை கண்காணிப்பாளர் அருள்மணி தொட்டியம் ஆய்வாளர் மோகன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
