மாவட்ட செய்திகள்
ஆசிரியை திட்டியதால் மாணவன் தற்கொலை !

நாமக்கல் மாவட்டம் மோடமங்கலம் தண்ணீர் பந்தல் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தவர் ரிதுன்.
இவர் நேற்று பள்ளியில் தோழிகளுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஆசிரியர் தெய்வாம்பாள் மாணவன் ரிதுனை கேவலமாக திட்டி உள்ளார் அதுமட்டுமின்றி அவர் சாதி பெயரை சொல்லியும் திட்டி உள்ளார்.
மேலும் அவரை ஒரு மணி நேரத்திற்கு மேலாக வகுப்பறையில் அனுமதிக்கவில்லை மன உளைச்சல் அடைந்த ரிதுன் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன் ஒரு கடிதம் ஒன்று எழுதியுள்ளார் அதில் நான் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் தெய்வாம்பாள் ஆசிரியை என அவர் எழுதியுள்ளார் மேலும் காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
