மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வெங்கலகுறிச்சி ஊராட்சி வெங்கல குறிச்சி கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வெங்கலகுறிச்சி ஊராட்சி வெங்கல குறிச்சி கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது.
இன்று 28.032022 மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் S.D.செந்தில்குமார் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நெப்போலியன், கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகதார நிலைய மருத்துவர் திவான், ஒன்றிய கவுன்சிலர் R. கலைச்செல்வி ராஜசேகர், க.கண்ணூச்சாமி , இரா.அரசு பாண்டி மருத்துவ ஆய்வாளர் மனோகர் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கல்லூரி மாணவ.மாணவியர்களின் மற்றும் கிராம பொதுமக்களின் நலன்கருதி மருத்துவ பரிசோதனை செய்யபட்டது. மாத்திரை மற்றும் ஆலோசனை வழங்கபட்டது.
நாட்டு நலபணி திட்ட அலுவலர் போரசிரியர் நாகராஜ், போரசிரியர் நிர்மல்குமார் அவர்களின் மேற்பார்வையிட்டனர்.
இறுதியில் ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு மாணவி கவிபிரியா நன்றி கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
