விருத்தாசலம் அருகே விவசாயிடம் நத்தம் பட்டா மாற்றத்திற்கு 14000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பள்ளிப்பட்டு மற்றும் ரூபநாராயணநல்லூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சுப்பிரமணி, ரூபநாராயணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமதாஸ் நத்தம் பட்டா மாற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி, ரூபாய் 14 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமதாஸ் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்ததின் பேரில் இன்று, லஞ்ச ஒழிப்புத் துறையினர் ராமதாஸ்யிடம் ரசாயனம் தடவிய 14 ஆயிரம் ரூபாயை கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியிடம் கொடுத்தனர்.
அதனை சுப்பிரமணி வாங்கும் பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியை கையும் களவுமாக பிடித்துகைது செய்தனர்.
CATEGORIES குற்றம்
TAGS கடலூர்கடலூர் மாவட்டம்கடலூர் விருத்தாசலம்குற்றம்பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது