BREAKING NEWS

அந்தியூர் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

அந்தியூர் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூரை அடுத்துள்ள சின்ன செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சித்தேஷ் இவரது மனைவி ரோஜா வயது 20 இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார் இந்நிலையில் இன்று மாலை இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

 

உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ரோஜாவை பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸில் அழைத்து வந்தபோது மணியாச்சி பள்ளம் என்ற இடத்தில் அடர்ந்த வனப் பகுதியில் வரும் பொழுது திடீரென ரோஜாவுக்கு பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸை மலைப்பாதையில் ஓரமாக நிறுத்தி அவசரகால மருத்துவர் நுட்புணர் சிவா மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆனந்தன் ஆகியோர் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

 

அப்போது ரோஜாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது இதற்குப் பின் தாயும் சேயும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர்.

 

ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த மருத்துவ உட்பட சிவா மற்றும் ஓட்டுநர் ஆனந்தன் ஆகியோருக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

 

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

CATEGORIES
TAGS