BREAKING NEWS

அந்தியூர் அருகே ஓடும் காரில் தீ விபத்து.

அந்தியூர் அருகே ஓடும் காரில் தீ விபத்து.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

சேலம் லட்சுமி பூர்ணா ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த இளையபெருமாள் என்பவர் நேற்று இரவு அந்தியூர் வந்துவிட்டு சேலம் நோக்கி தனது மாருதி சுவிப்ட் டிசையர் காரில் கொண்டிருந்தார்.

 

அப்பொழுது அவர் பருவாச்சி பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு வெளியே வரும்பொழுது அவருடைய கார் மின் கசிவு காரணமாக காரின் முன் பகுதி திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.

 

 

அங்கு இருந்தவர்கள் உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் அங்கு விரைந்து தீயணைப்புத் துறையினர் செல்வதற்குள் பங்கு ஊழியர்கள் பெட்ரோல் பங்கில் உள்ள தீ அணைக்கும் கருவியின் மூலம் தீ பற்றி எரிந்த காரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றினார்.

 

துரிதமாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது இவ்விபத்து குறித்து அந்தியூர் தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS