அந்தியூர் அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி மரத்தில் மோதி விபத்து.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்
ஈரோடு மாவட்டம்,
கர்நாடக மாநிலம் திட்டூர் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு சரக்கு (தேங்காய் தொட்டி கரி) ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று இன்று காலை வந்து கொண்டிருக்கிறது.
லாரி அந்தியூர் அருகே உள்ள முத்தரசன்குட்டை பகுதிக்கு வந்தபோது லாரி ஓட்டுநர் டீ குடிப்பதற்காக லாரியை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு டீக்கடைக்கு இறங்கி சென்றுள்ளார், அப்போது அவர் ஹேண்ட் பிரேக் போடவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக லாரி நகர்ந்து அருகே இருந்த மரத்தில் மோதி விபத்துக்குளானது, இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.
CATEGORIES ஈரோடு