அமராவதி அணையில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படகு சவாரி தொடக்கம்.

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் மீண்டும் பிறகு சவாரி துவக்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மகளிர் குழுக்கள் மூலம் படகு இயக்கப்படுகிறது எட்டு பேர் கொண்ட பயணிக்கும் வகையில் ஒரே ஒரு மோட்டார் படகு உள்ளது.
அமராவதி அணையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றி காண்பிக்கப்படும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக படகு இயக்கப்படவில்லை.
அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் படகு சவாரி மீண்டும் துவக்கப்பட்டது இருப்பினும் மார்ச் மாதம் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஏழு மாதங்களுக்கு பிறகு மீண்டும் படகு சவாரி இருதினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
ஒரு நபருக்கு கட்டணமாக ரூபாய் 50 வசூலிக்கப்படுகிறது பாதுகாப்பு உபகரணங்களுடன் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
தீபாவளி விடுமுறை முன்னிட்டு அமராவதி அணிக்கு ஏராளமானோர் வரத்து துவங்கியுள்ளனர். படகு சவாரி தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.