BREAKING NEWS

அரங்கண்டநல்லூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரங்கண்டநல்லூரில் உள்ள ரயில் நிலையம் அருகில் அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, முன்னாள் MLA குமரகுரு தலைமையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதை பொருள் கிடங்காக மாறியதைக் கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.மேலும் திமுக ஆட்சியில் போதைப்பொருள் அதிக அளவு விற்பனை செய்வதால் இளைஞர்கள் சீரழிவதாகவும்,சட்ட ஒழுங்கு சீர்குலைந்து போவதாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Share this…

CATEGORIES
TAGS