அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் 13 ஆம் ஆண்டு பால்குட திருவிழா
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜெ.தத்தனூர் மேலூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 13 ஆம் ஆண்டு பால் குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இன்று காலை ஆறு மணிக்கு மேல் 7:30 மணிக்குள் கணபதி ஹோமம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து பால் குடத் திருவிழா ஏராளமான பக்தர்கள் கடும் விரதம் இருந்து ஏரிக்கரையில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். இதில் அக்னி சட்டி பூங்கரகம் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு குத்து விளக்கு பூஜையும் கன்னி பூஜையும் நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து மாரியம்மன் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்று செல்ல வேண்டுமென ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
