ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மந்தவெளி கானா சேனா தலைமையில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மந்தவெளி கானாசனா தலைமையில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளியின் வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டினர் மேலும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வில் புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள் அன்பு, மதன், அருண் வெங்கடேஷ், சுபாஷ், வினோத், மற்றும் பள்ளியின் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலும் அவரது செயலை பாராட்டி பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
CATEGORIES சேலம்
