ஆளுநர் வருகையொட்டி தஞ்சாவூர் – திருவையாறு சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வுக்கான பஞ்சரத்தின கீர்த்தனை இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ளார்.
தமிழக ஆளுநர் வருகையொட்டி தஞ்சை – திருவையாறு சாலையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தஞ்சை, நாகை, திருவாரூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிதலைப்பு செய்திகள்தியாகராஜரின் 176வது ஆராதனை விழாதிருவையாறு