ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கவுந்தப்பாடி கிளையில் மாற்றுத்திறைாளிகளுக்கான கடன் வழங்கும் முகாம்.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கவுந்தப்பாடி கிளையில் மாற்றுத்திறைாளிகளுக்கான கடன் வழங்கும் முகாமினை முன்னாள் அமைச்சரும் பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பண்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.ஈரோடு மாவட்ட மத்திய வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.
விழாவில் பவானி ஒன்றிய குழுத் தலைவர் பூங்கோதை வரதராஜ், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா கே.பி. தங்கமணி உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
