ஒசூர் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனர். பேரிகை போலீஸார் சொன்னேபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்ற போது, அவ் வழியாக வந்தவரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.
அப்போது, அவரிடமிருந்த 60 கிராம் கஞ்சாவைக் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் கே.என்.தொட்டியைச் சேர்ந்த வாசு (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்
இதேபோல ஒசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாரால் பேளகொண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது அவ்வழியாக வந்த ஒரு பெண்ணை சோதனை செய்தனர்.
அப்போது, அவர் மறைத்து வைத்திருந்த 80 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். விசாரணையில் பெத்த பேளகொண்டப்பள்ளியை சேர்ந்த ராதா (42) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
CATEGORIES கிருஷ்ணகிரி