கடலூர் அருகே புதர் மண்டி கிடக்கும் சுகாதார வளாகம் சரி செய்ய பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுப்பாக்கம் ஏழாவது வார்டில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் இயற்கை உபாதை கழிப்பதற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக கழிவறையின் கதவுகள் சேதமடைந்தும் புதர்மண்டியும் கிடப்பதாகவும் இரவு நேரங்களில் பாம்பு பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் ஊர்ந்து வருவதாகவும் செப்டிக் டேங்க் மூடி சேதமடைந்து.
திறந்த வெளியாக கிடப்பதால் அருகிலுள்ள கால்நடைகள் அவ்வப்போது அதில் தவறி விழுந்து இறந்து விடுவதாகவும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் வயதானவர்களே அதிகம் உள்ளதால் சுகாதார வளாகத்தை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிஅப்பகுதி குடியிருப்பு வாசிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.