கனியாமூர் பள்ளி தாளாளர், பெண் நிர்வாகிக்கு ஒருநாள் போலீஸ் காவல்: மாணவி இறப்பில் மர்மம் விலகுமா?

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் , சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி மர்மமான முறையில் கடந்த 13-ம் தேதி பள்ளியில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரில் சின்னசேலம் போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.