கரியாம்பட்டியில் இருதரப்பு கிடையே சமாதான கூட்டம் சுமுக முடிவு.

செய்தியாளர் ம.ராஜா.
திண்டுக்கல் மாவட்டம்,
நிலக்கோட்டை வட்டம், சிலுக்குவார்பட்டி கிராமம், கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது கரியாம்பட்டி ,நடுப்பட்டி ஆகிய 2 கிராம மக்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு நிலக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து கரியாம்பட்டி ஊர் பொதுமக்கள் இந்து-வன்னியகுல சத்திரியா மக்களுக்கு பாத்தியப்பட்ட காளியம்மன், மஹாகணபதி, பகவதியம்மன், முனியப்பன் கோவில்களில் 3.2.2023 முதல் 5.2.2023 வரை கோவில் கும்பாபிசேகம் நடைபெறுவதற்கு,
அனுமதி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி தலைமையில் நேற்று இரவு கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டி ஊர் பொதுமக்கள் முன்னிலையில் 31.1.23 அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அமைதிப் பேச்சுவார்த்தையில் 2 ஊர் பொதுமக்களும் பிரச்சனை ஏதும் செய்ய மாட்டோம் என்றும், அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் தெரிவித்தனர் . மேலும் 2 ஊர் பொதுமக்களின் சுமூகப் பேச்சுவார்த்தை மூலம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், மண்டல துணை தாசிலர் சரவணன் நிலக்கோட்டை வருவாய் ஆய்வாளர் பிரியங்கா சிலுக்குவார் பட்டி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் கரியாம்பட்டி, நடுப்பட்டி ஆகிய பொதுமக்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.