BREAKING NEWS

கரூரில் வரும் 1ம் தேதி திருச்சி விமானம் நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

கரூரில் வரும் 1ம் தேதி திருச்சி விமானம் நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

கரூரில் வரும் 1ம் தேதி திருச்சி விமானம் நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

இரவு பயணியர் விடுதியில் தங்கும் முதல்வர் கரூர் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள், அனைத்து வர்த்தக சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் முதல்வர் கோரிக்கைகளை கேட்க உள்ளார். அடுத்த நாளான 2ம் தேதி காலை 10 மணியளவில் திருமாநிலையூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டங்கள் துவக்க விழா மேடைக்கு வர உள்ளார்.

காலை 9 மணி முதல் 10 மணி வரை பயணியர் விடுதி முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை சாலையின் இரு புறமும் 23 இடங்களில் சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் பேர் வரவேற்பு அளிக்க உள்ளனர். 76 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க உள்ளார் என்றார். வரும் 1 மற்றும் 2ம் தேதிகள் கரூர் மாநகரப் பகுதி திருவிழா போல் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

முன்னதாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் செயல்படுவது குறித்து, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் தொழில் துறை சார்பில் முதல்வரிடத்தில் முன் வைக்கப்பட வேண்டிய பல்வேறு கோரிக்கைகள் குறித்து, கரூர் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில் முனைவோர் உடனான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார். அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து மனுக்களாக வாங்கிக் கொண்டார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )