BREAKING NEWS

காட்பாடி அருகே இரவு பகலாக நடைபெறும் புகழ் பெற்ற திருவலம் இரும்பு பாலம் சீரமைக்கும் பணிகள்..

காட்பாடி அருகே இரவு பகலாக நடைபெறும் புகழ் பெற்ற திருவலம் இரும்பு பாலம் சீரமைக்கும் பணிகள்..

பணிகள் முடிந்து ஓரிரு நாட்களில் முடிவடையும் என அதிகாரிகள் தகவல்…

வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள சிறப்புமிக்க ‘ராஜேந்திரா இரும்பு பாலம்’ அனைத்து மொழிகளிலும் திரைக்கு வந்த பல்வேறு திரைப்படங்கள். தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் இடம் பெற்றுள்ளது இப்பாலம் பிரசித்திப் பெற்ற இப்பாலத்தினை இந்தியாவின் பிற மாநிலங்களில், மற்றும் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் இப்பாலத்தினை கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்து செல்கின்றனர்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இப்பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த 1935ம் ஆண்டு தொடங்கி 4 ஆண்டுகளாக பொன்னையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இப்பாலத்திற்கு மிக அருகே பாலாறும் கலக்கிறது.


இதனிடையே பாலத்தின் மீது உள்ள சாலையில் 12 இணைப்பு பகுதியில் 11 இணைப்பு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு அதிலிருந்த கான்கீரிட் சிமென்ட், ஜல்லி கலவைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள் பாலத்தின் சாலையில் வாகனங்களை இயக்க பெரும் சிரமம் அடைந்தனர்.

இதனை அடுத்து பாலத்தை சீரமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பாலத்தை சீரமைக்கும் பணியினினை இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.


இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில் பாலத்தின் 8 இணைப்பு சீரமைக்கப் பட்டுள்ளது மீதம் உள்ள பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் பாலத்தில் வழக்கம்போல் வாகன போக்குவரத்திற்கு திறக்கப்படும் என்று தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )