குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

திருப்பூர்,
உடுமலை அருகே உள்ள மடத்துக்கும் சட்டமன்ற தொகுதி மைவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரசிங்காபுரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள் ஆவர் இந்தப் பகுதிக்குகடந்த 15 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பொள்ளாச்சி , பழனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் சரியாக வினியோகம் செய்யாது குறித்து பலமுறை தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி காலிகுடங்களுடன் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்துக்கு மேலான போக்குவரத்து பார்த்தது மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி மைவாடி பஞ்சாயத்து நரசிங்கபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை என அப்பகுதி மக்கள் பல முறை பஞ்சாயத்து அலுவலகத்தில் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என…
அப்பகுதி பொதுமக்கள் காலிகுடங்களுடன் பொள்ளாச்சி பழனி தேசிய நெடுஞ்சாலையில் நரசிங்காபுரத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது காவல்துறையினர் அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.