குடும்பப் பிரச்சனை காரணமாக கிணற்றில் இரு குழந்தைகளோடு குதித்து தற்கொலை: கிராம நிர்வாக அலுவலர் புகார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்து வழியைச் சேர்ந்தவர் முருகன் இவர் அப்பகுதியில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மீனா முருகனும் மீனாவும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த ஏழு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் மீனா மதுரை மாவட்டம் பழங்காநத்ததை சேர்ந்தவர்.
இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வருவந்தாக கூறப்படுகிறது ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி மீனா குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சி செய்து உள்ளார் அவரை கணவர் முருகன் காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து கொண்டே இருந்துள்ளது நேற்று மாலை கணவர் முருகன் குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லையே ஏன் என மனைவி மீனாவை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த மீனா தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இரு குழந்தைகளோடு குதித்து தற்கொலை செய்து கொண்டார் இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குறித்து தற்கொலை செய்து கொண்ட மீனா மற்றும் இரண்டு குழந்தைகளை வாசுதேவநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிலைய அதிகாரி ஷேக் அப்துல்லா மற்றும் வீரர்கள் உடலை மீட்டு வாசுதேவநல்லூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இச்ச சம்பவத்தால் ஆத்துவழி பகுதியில் சோகம் நிறைந்து காணப்படுகிறது.