கூடங்குளம் புளியமரத்து தசரா குழு பக்தர்கள் குலசை முத்தாரம்மன் க்கு வேடம் அணிந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

பெண் தெய்வ வழிபாடுகளில் முதன்மை தெய்வமாக வழிபாட்டில் இருந்தது காளி வழிபாடு. இதனைத் தொடர்ந்து உருவான வழிபாடு தான் அஷ்டகாளி வழிபாடு. அதிலிருந்து உருவானது தான் முத்தாரம்மன் வழிபாடு. இந்த முத்தாரம்மன் அஷ்ட காளியரில் ஒருவராக கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல லட்சம் பேர் கூடும் அற்புதமான திருவிழா குலசை முத்தாரம்மன்கோயில் தசரா திருவிழா. நவராத்திரியை முன்னிட்டு முத்தாரம்மனின் அருளாட்சியால் வேடமணிந்த பக்தர்கள் கூட்டம் வருடத்துக்கு வருடம் கூடிக்கொண்டே இருக்கிறது.
மைசூர் தசராவை மிஞ்சும் வகையில், தமிழ்நாட்டின் தென்கோடியான குலசேகரப்பட்டினம் கடற்கரையில் தசரா திருவிழா நடைபெறுகிறது.
இவ்விழாவின் நிறைவில் மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்ஹாரம் செய்கிறார் நெல்லை மாவட்டம் கூடங்குளம் புளியமரத்து தசரா குழு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வேடம் அணிந்து வந்தனர்.
இந்த குழு சுமார் 20 வருடங்களாக கூடங்குளம் பகுதியில் குடில் அமைத்து அதில் பக்தர்கள் குலசை முத்தாரம்மன் திருவிழா நேரத்தில் விரதம் இருந்து வருகின்றனர் .