BREAKING NEWS

கேபிஆர் பவுண்டேஷன் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

கேபிஆர் பவுண்டேஷன் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!

காட்பாடியில் கே.பி.ஆர். பவுண்டேஷன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் கே.பி.ஆர். பவுண்டேஷன் நிறுவனர் கார்த்திக் பிரசாந்த் ரெட்டி சுகுமார் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு,பேனா,பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்களை வழங்கி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்

CATEGORIES
TAGS