கொடைக்கானல் நகராட்சியை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்
அருந்ததியர்களின் ஆற்றல்மிகு அரசியல் எழுச்சி தலைவர்
ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு. ஜக்கையன் அவர்களின் ஆலோசனையின்படி
ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக கொடைக்கானல் நகராட்சி பணியில் உள்ள தூய்மை பணியாளர்களை அவமதிப்புக்கு உள்ளாக்கியும்,
தற்கொலை முயற்சிக்கு ஆளாகுவதையும் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைச் செயலாளர் சித்ரா தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் கா.மாரிமுத்து முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் தடை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
CATEGORIES திண்டுக்கல்