BREAKING NEWS

கோவில்பட்டியில் செயல்படாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 20 வது வார்டு பாஜக நகர மன்ற உறுப்பினர் மீசை எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோவில்பட்டியில் செயல்படாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 20 வது வார்டு பாஜக நகர மன்ற உறுப்பினர் மீசை எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 20 வது வார்டு பாஜகவை நகர மன்ற உறுப்பினர் விஜயகுமார் இவர் தங்கள் 20 வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வைத்து கண்டு கொள்ளாத செயல்படாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு மீசை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

 

அப்போது தங்கள் பகுதியில் உள்ள இருந்த குடிநீர் தொட்டி இடித்துவிட்டு தற்போது குடிநீர் தொட்டு அமைக்கப்படாமல் இருப்பதாகவும் 20 வது வார்டில் அனைத்து தெருக்களின் சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி கழிவுநீர் வருகால் வசதி இல்லாததை கண்டித்தும் மீசை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதை நிறைவேற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

CATEGORIES
TAGS