சங்கரன்கோவில் திருவெம்பாவை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் திருவெம்பாவை திருவிழா இன்று காலை சரியாக 6.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் தீபாராதனை நடைபெற்றன 10 நாட்கள் நடைபெறும் திருவெம்பாவை திருவிழாவின் சிகர நிகழ்வான ஆருத்ரா தரிசனம் ஜனவரி 6ம் தேதி நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் வீதி உல நடைபெறுகிறது திருவெம்பாவை கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்சங்கரநாராயணசுவாமி திருக்கோவில்சங்கரன்கோவில்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலிதிருவெம்பாவை திருவிழாதென்காசி மாவட்டம்