சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வயிராற உணவு வழங்கல்!

புதுச்சேரியில் பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் சாலையோர மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இதற்கு உறுதுணையாக திரு. பிரஷாந்த், சுஜி வெங்கடேஷ், சந்தானம், நந்தகுமார், சதீஷ், முனைவர். செந்தில்குமார் (சென்னை) ஆகியோர் மேற்பார்வையில் சாலையோர மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது .மேலும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பிரசாந்துக்கு நன்றி கூறினார்கள். மேலும் இதுபோல் செய்யும் நல்ல உள்ளங்களுக்கு மிகத் தாழ்மையுடன் பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் முனைவர். லோ. விஜயகுமார் வாழ்த்துக்கள் கூறினார். இப்படி உணவு வழங்கி வரும் பணியை கடந்த 5ஆண்டுகளாக செய்து வருகிறார் நிறுவனர் முனைவர் லோ.விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Uncategorized
