சிறுபாக்கம் அருகே கள்ள சாராயம் விற்ற இருவர் கைது. ! போலீசார் விசாரணை.
கடலூர் செய்தியாளர் கொ.விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சித்தேரி கிராமத்தில் சுடுகாடு பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திட்டக்குடி உதவி ஆய்வாளர் பாக்யராஜ் மற்றும் ராமநத்தம் உதவி ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல், அஜய், ஆகியோர் கள்ளச்சாராயம் விற்று வந்தனர், உடனே போலீசார் இருவர்களையும் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்,
அப்போது அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 50 லிட்டர் கள்ளச்சாரத்தையும் விற்பனை செய்த இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES கடலூர்
TAGS கடலூர் வேப்பூர்கள்ளச்சாராயம்கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைதுகுற்றம்சித்தேரி கிராமம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்