சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் காரையூரில் இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் காரையூரில் இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் பணிகள் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை (127) மொத்ததொகை (₹119.68) கோடி முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல். பணிகள் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை (44) மெத்த தொகை (₹24.77) கோடி, பல்வேறு துறைகளில் வாரியாக நல திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை (59.162) மொத்த தொகை (₹136.45கோடி) என மொத்தம் 280.90கோடி ரூபாய் பயனாளிகளுக்கு உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சி ஊராக வளர்ச்சிதுறை அமைச்சர் திரு கே ஆர் பெரியகருப்பன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே. என். நேரு, இலக்கிய மாணவர் அணி தலைவர் மு. தென்னவன், மானாமதுரை நகரமன்ற தலைவர மாரியப்பன் கென்னடி,காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, திமுக கட்சி நிர்வாகிகள் கழக உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனார்.
